என்னவோ எழுதிக் கொண்டிருந்தேன். அதில் பொறுத்து என்ற சொல்லில் று சரியா ரு சரியா என்பதில் சிக்கிக் கொண்டேன். எதிலிருந்து எதற்குள் தப்பிக்க என்ற நேர்ச்சையைக் கைவிட்ட பிறகு வாழ்க்கையோட்டத்தின் நிலையில் எண்ணம் புள்ளியாகி மயக்கம் வரும் பொழுதில் எல்லாம் கடந்து போகும்…பெருமூச்சிற்குப் பிறகு ‘உன்னவ லட்சுமீ நாராயணா’ எழுதிய சேரி நாவலின் தமிழாக்கத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இது தாமரைபாரதியின் தபுதாராவின் புன்னகை கவிதை நூலுக்கு சிறு குறிப்பு முகநூலில் எழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கும் ஆனால் கிடைக்காத ஓர்மைக்கும் இடையில் நடந்தது. சேரி நாவலின் போக்கில் ஒரு பகுதி இப்படி வருகிறது. “நிராகாராம் (அருவம்) சாகாரம் (உருவம்) எதற்காக ஆனது?” “எப்படியாயிற்றென்ற விஷயத்தை ரிஷிகள் மிக விஸ்தாரமாக சர்ச்சித்திருக்கிறார்கள் என்றாலும் எதற்காக ஆனது என்கிற விஷயம் மனித அறிவுக்கு தெளிவாகத் தெரியவில்லை. இறைவன் திருவிளையாடல் என்று மட்டும்தான் சொன்னார்கள்.” “எந்தவிதமான உபாசனை சிறந்தது” “நோய் தீர்த்ததுதான் மருந்து. தத்துவத்தைப் பொறுத்திருக்கும். சிலர் பரத்துவத்தினால் விஸ்வ வியாபகமாக இருக்கும் அவரைக் கண்டார்கள். புராணங்களை